Skip to content
Home » காதலியை ஏமாற்றி விட்டு…. இன்னொரு பெண்ணுடன் திருமணம்….. திருச்சி வாலிபர் கைது

காதலியை ஏமாற்றி விட்டு…. இன்னொரு பெண்ணுடன் திருமணம்….. திருச்சி வாலிபர் கைது

திருச்சி அடுத்த திருவெறும்பூர் மேல குமரேசபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகள் சத்திய கிருத்திகா (27) .ஐடி ஊழியரான இவர் கடந்த 2013 ம் ஆண்டு ர் இன்ஜினியரிங் கல்லூரியில்  படித்துக் கொண்டிருந்த பொழுது மற்றொரு  இன்ஜினியரிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்த திருவெறும்பூர் பகவதிபுரம் முதல் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கார்த்திக் (28) என்பவருடன்  காதல்  ஏற்பட்டுள்ளது.இவர்கள்கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கார்த்திக் தனது வீட்டின் அருகே உள்ள ராமகிருஷ்ணன் மகள் புவனேஸ்வரி என்பவரை ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து பதிவு திருமணம்  செய்துகொண்டார். இதை மறைத்து கார்த்திக் சத்திய கிருத்திகாவுடன்  தொடர்ந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி சத்திய கிருத்திகாவிற்கு தெரிய வந்ததும் சத்திய கிருத்திகா கார்த்திகேயனிடம் இதுபற்றி  கேட்டுள்ளார் ஆனால் கார்த்திக்,  சத்திய கிருத்திகாவிற்கு சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த சத்திய கிருத்திகா இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கார்த்திக் தற்போது கொரியர் நிறுவனம் நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!