Skip to content
Home » துருக்கி, சிரியா நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு

துருக்கி, சிரியா நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அதேவேளை, இந்த பயங்கர நிலநடுக்கத்தால்111 பேர் பலியாகி உள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடக்கிறது. சேத விவரம்  அடுத்த சில மணி நேரங்களில் தெரியவரும் என மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. சிரியாவில்  ஏற்பட்ட நிலநடுக்கத்தால்76  பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.இரு நாடுகளிலும் சேர்த்து  பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!