திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசப்பிரபு கடந்த ஜனவரி 24ம் தேததி மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். அவருக்கு அரசின் சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நிருபரை தாக்கிய வழக்கில் இப்போது நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் ராஜா சுபின் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தான் கூலிப்படையை ஏவி பத்தி்ரிகையாளரை தாக்கி உள்ளார். முன்விரோதம் காரணமாக அவர் கூலிப்படையை ஏவியது விசாரணையில் தெரியவந்துள்ளது.