Skip to content
Home » டூவிலர் -டாட்டா ஏசி மோதி விபத்து… 3 பள்ளி மாணவர்கள் பலி…

டூவிலர் -டாட்டா ஏசி மோதி விபத்து… 3 பள்ளி மாணவர்கள் பலி…

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரிஸ்வான்(17),பாஸித்(17), நூஃபுல்(17) ஆகிய மூவரும் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர் இவர்கள் நேற்று இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் திருவாரூர் நாகை நெடுஞ்சாலையில் பயணித்துள்ளனர். கூத்தூர் பெட்ரோல் பங்க் அருகே திருவாரூரிலிருந்து நாகை நோக்கி வந்த சரக்கு வாகனத்தின் (டாட்டா ஏஸ்) மீது மூன்று பேரும் பயணித்த இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு மூவருக்கும் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரிஸ்வான் மற்றும் பாசித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த நூஃபுல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று உயிழந்தார் இச்சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!