Skip to content
Home » டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. தஞ்சை அருகே ஒருவர் பலி..

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. தஞ்சை அருகே ஒருவர் பலி..

தஞ்சை அருகே வல்லம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த வெள்ளைக்கண்ணு என்பவரின் மகன் அஜித் (24). சோபா தயாரிக்கும் பணி செய்து வந்தார். இவர் குடும்பத்தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு திருவாரூருக்கு சென்ற தனது மனைவியை அழைத்து வர பைக்கில் நேற்று இரவு வல்லத்தில் இருந்து புறப்பட்டார்.

தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது முன்னால் சென்ற பைக் மீது அஜித் ஓட்டிச் சென்ற பைக் மோதியது. இதில் நிலைத் தடுமாறி சாலையில் விழுந்த அஜித் படுகாயமடைந்தார். உடன் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அஜித் இறந்து விட்டார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!