Skip to content
Home » வால்பாறை அருகே காட்டு யானைகள் முகாம்….

வால்பாறை அருகே காட்டு யானைகள் முகாம்….

  • by Senthil

கோவை மாவட்டம்வால்பாறையை அடுத்த நல்லகாத்து சோலையார் எஸ்டேட் ஆர்ச் பகுதியில் 10 யானை கொண்ட கூட்டம் அன்புள்ள ஆற்றங்கரை பகுதியில் முகாமிட்டிருந்தது ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சோலையார் நல்ல கார்த்து எஸ்டேட் பகுதியில் ஆற்றுப்பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக பத்து காட்டு யானை கூட்டம் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தது .மேலும் கடந்த இரண்டு வார காலமாக வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் வால்பாறை வனச்சரக வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு பகலாக முகாமிட்டு குடியிருப்பு பகுதிக்கு நுழையாமல் காத்து வந்தனர் இன்று பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் வால்பாறைக்கு கோவை திருப்பூர் சென்னை பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து சென்றனர் இந்நிகழ்வில் முகாமிட்டிருந்த காட்டு யானையை சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்டு களித்தனர் இதனை அறிந்த வனத்துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!