Skip to content
Home » ஜெயங்கொண்டத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு விசிக எதிர்ப்பு…

ஜெயங்கொண்டத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு விசிக எதிர்ப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர்கள் கதிர்வளவன், அங்கனூர் சிவா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது இது இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு இந்திய

அரசியலமைப்பு சட்டம் அனைத்து மத இன மக்களுக்கும் பொதுவாக இருக்கும் நிலையில் ஒரு சாரார் மட்டும் பாதிக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்திருப்பது கண்டிக்கத்தக்கது இச்சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!