Skip to content
Home » விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்களின் விலை அதிகரிப்பு…

விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்களின் விலை அதிகரிப்பு…

  • by Senthil

தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படும்.

இதே போல் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்வர். வியாபாரிகள் மொத்தமாகவும் பூக்கள் வாங்கி செல்வர். முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். மேலும் வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு, மழையால் பாதிப்பு போன்றவை இருந்தாலும் விலை அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நேற்று ஆவணி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதாலும்,,. இன்று விநாயகர் சதுர்த்தி என்பதாலும் பூக்களின் தேவை அதிகம் இருந்தது. இதனால் கடந்த 2 நாட்களாகவே பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று மல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனையானது. ஆனால் இன்று கிலோ

 

ரூ.1250- வரை விற்பனை செய்யப்படுகிறது. முல்லை கிலோ ரூ.1000, ஆப்பிள் ரோஸ் ரூ .250, சம்பங்கி ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் விலையும் நேற்றைய விலையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் பொதுமக்கள் விலையை பற்றி கவலைப்படாமல் பூக்களை வாங்கி சென்றனர்.

இது குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், நேற்று ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள். மேலும் இன்று விநாயகர் சதுர்த்தி. இதனால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம் இருந்தது. இதனால் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளன. இருந்தாலும் பூக்களின் வரத்தும் அதிகமாக உள்ளது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!