Skip to content
Home » மகளிர் இட ஒதுக்கீடு….. காங்கிரஸ் ஆதரவு…. சோனியா அறிவிப்பு

மகளிர் இட ஒதுக்கீடு….. காங்கிரஸ் ஆதரவு…. சோனியா அறிவிப்பு

 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால், மசோதாவை தாக்கல் செய்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, 15 ஆண்டுகளுக்கு மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்கிறது. பெண்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்படும்.

இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் 3ம் நாளான இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் நான் ஆதரவு அளிக்கிறேன். இந்த சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!