ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று விடப்பட்டது.
இந்த யானை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சரளபதி பகுதியில் முகாமிட்டு அங்கு உள்ள பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் தனியார் தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மக்னா யானையை கட்டுப்படுத்த கடந்த சில தினங்களுக்கு வனத்துறையினர்
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இருப்பினும் இரவு நேரங்களில் தொடர்ந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சேத்துமடை உள்ள தனியார் கலா என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த மக்னா யானை கடந்தஇரண்டு நாட்களாக அங்கிருந்த 150க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது. ஒரு சில மரங்களை வேரோடு பிடுங்கி எரிந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கும்கி யானைகளையானைகள் வளர்ப்பு முகாமுக்கு நேற்று வனத்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர், இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்,இன்னும் சில தினங்களில் மக்னா பிடிக்கப்படும் என வனத்துறை என தெரிவித்துள்ளனர்.