கரூர் அரசு கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார்.இந்தப் பேரணி மருத்துவக் கல்லூரியில் துவங்கி காந்திகிராமம் விளையாட்டு மைதானம் வரை சென்று மீண்டும் கல்லூரிக்கு திரும்பி வந்தது. இந்தப் பேரணியின் போது
மாணவ, மாணவிகள் இரத்த தானத்தை வலியுறுத்தி கோசமிட்டபடி,பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியபடி வந்தனர்.