கோவை அருகே உள்ள கோவைபுதூர் பகுதியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆரோக்கிய வாழ்வில் யோகா என்பதை வலியுறுத்தி 20 க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து கவனம் ஈர்த்துள்ளனர். இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகா குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது..
இந்நிலையில் கோவை மாவட்டம், கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து 20 க்கும் மேற்பட்ட ஆசனங்களை 40 நிமிடங்கள் இடைவிடாது செய்து அசத்தியுள்ளனர். போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் ஏழு வயது முதலான குழந்தைகள் துவங்கி 10 ஆம் வகுப்பு பயலும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், பங்கேற்ற மாணவ மாணவியர்கள் பாத ஹஸ்தா சனம், உட்கட்டா சனம், திருகோண ஆசனம், புஜங்கா சனம், பாலாசனம், உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஆசனங்களை இடைவிடாமல் செய்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மழலை பள்ளி மாணவர்கள் மரக்கன்றுகளை வழங்கினர்…