தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளை சட்டமன்ற தொகுதிக்கு 3 பேர் வீதம் அழைத்து அவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அவர் எதிர்காலத்தில் அரசியலில் குதிப்பதற்கு முன்னோட்டமாக இதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு இப்போது கடிதங்களும் எழுதி வருகிறார்.
அந்த வகையில் கடந்த ஜூன் 28,29ம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர். இதனை சிறப்பாக செய்த நிர்வாகிகளை நடிகர் விஜய் நோில் அழைத்து பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.