Skip to content
Home » அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு…. விவசாயிகளுக்கு அழைப்பு…

அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு…. விவசாயிகளுக்கு அழைப்பு…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2023-2024 ம் ஆண்டு குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஸ்ரீபுரந்தான், தூத்தூர், குருவாடி, கோவிந்தபுத்தூர், அருள்மொழி, தா.கூடலூர், சன்னாசிநல்லூர், இலந்தைகூடம், காமரசவள்ளி, அழகியமனவாளம், கண்டிராதீர்த்தம், திருமழபாடி, காடுவெட்டி, மேலவரப்பன்குறிச்சி, குலமாணிக்கம் மற்றும் செங்கராயன்கட்டளை இடங்களில் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆதார், சிட்டா அடங்கல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நேரில் கொண்டுசென்று, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து E-KYC கொடுத்து Blue Tooth Printer கையடக்க கருவியில் விவசாயிகளின் கைவிரல் ரேகையை பதிவுசெய்த பிறகு விவசாயிகளின் விபரங்கள் தெரியவரும். இதனடிப்படையில் முன்பதிவு செய்யப்படும்.

நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவு உறுதி செய்ததும், சம்பந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.

பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு, விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும், ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு நெல்லை கொண்டு சென்று விவசாயிகளின் கைரேகையை பதிவு செய்து விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை தூற்றி சாக்குகளில் பிடித்து லாரிகளில் ஏற்றுவதற்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.10/- சுமை தூக்கும் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக கழகத்தின் மூலம் செலுத்தப்படுகிறது. விவசாயிகள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

கே.எம்.எஸ் 2023-24 ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதார விலை விபரம் (01.09.2023 முதல்) நெல் கிரேடு “ஏ” ரகத்திற்கு, மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதார விலை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.2203/-, மாநில அரசின் ஊக்கத் தொகை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.107/-, குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் ஊக்கத்தொகை கூடுதல் (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.2310/- மற்றும் நெல் பொதுரகம், மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதார விலை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.2183/-, மாநில அரசின் ஊக்கத் தொகை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.82/-, குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் ஊக்கத்தொகை கூடுதல் (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.2265/- என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!