Skip to content
Home » திருச்சியில் கல்லூரி பஸ்-சரக்கு லாரி மோதி விபத்து.. சிக்கிக்கொண்ட டிரைவர்…

திருச்சியில் கல்லூரி பஸ்-சரக்கு லாரி மோதி விபத்து.. சிக்கிக்கொண்ட டிரைவர்…

  • by Senthil

திருச்சி-திண்டுக்கல் ரோட்டில் உள்ள கள்ளிக்குடி பகுதியில் கேர் பொறியியல் கல்லூரி. இன்று மாலை வகுப்புகள் முடிந்த நிலையில் கேர் கல்லூரியில் இருந்து மாணவ, மாணவியரை எற்றிக்கொண்டு திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டை நோக்கி பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ் புங்கனூர் பிரிவு ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல் நோக்கி சொல்ல முயன்ற சரக்கு லாரியின் பின்புறம்  கல்லூரி பஸ் வேகமாக மோதியது, இந்த விபத்தில் கல்லூரி பஸ்சின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் 8 மாணவ, மாணவியர் காயமடைந்தனர். மேலும் பஸ்சின் டிரைவரான தாயனூரைச் சேர்ந்த இன்னாசியின் கால்கள் பஸ்சிற்குள் மாட்டிக்கொண்டன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் சுமார் 1 மணி நேரமாக போராடி பஸ்சின் டிரைவர் இன்னாசியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் சரக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரேஷன் பொருட்கள் ரோட்டில் சிதறி கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!