Skip to content
Home » விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில்…. பலி எண்ணிக்கை 10 ஆனது

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில்…. பலி எண்ணிக்கை 10 ஆனது

  • by Senthil

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள ராமுதேவன் பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில்   பட்டாசுக்கு வெடிமருந்து கலக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 5  அறைகள் இடிந்து தரை மட்டமானது. இந்த  அறைகளில் 20க்கும் மேற்பட்டவர்கள் பணியில் இருந்தனர்.  கட்டிட இடிபாடு மற்றும் வெடிவிபத்தில் அவர்கள் சிக்கி கொண்டனர்.

தகவல் அறிந்ததும்  தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  விபத்து நடந்த இடத்தில் இருந்து 8 சடலங்கள் மீட்கப்பட்டன. 10க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களுடன்  ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 2 பேர் இறந்தனர். இறந்தவர்களில் 4 பேர் பெண்கள்.   ரமேஷ்், கருப்பாயி, அம்பிகா  ஆகியோர் இறந்துவிட்டனர் என முதல் கட்டமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!