தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும்வேட்புமனு தாக்கல் நேற்று மாலை முடிவடைந்தது. இன்று அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது.
சேலம் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் வேட்புமனுவை பரிசீலித்த தேர்தல் நடத்தும் அதிகாரி, கலெக்டர் பிருந்தாதேவி, செல்வகணபதிக்கு 2 இடத்தில் ஓட்டு இருப்பதாக கூறி வேட்புமனுவை நிறுத்தி வைத்தார். இது குறித்து செல்வகணபதி விளக்கம் அளித்தார். பின்னர் நடந்த பரிசீலனையில் நிறுத்திவைக்கப்பட்ட வேட்புமனு ஏற்கப்பட்டதாக கலெக்டர் அறிவித்தார்.