சிவகங்கை அருகே பழமலை நகர் பகுதியில் இரண்டு ஆண்கள் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், அவர்களின் உடல்களை போலீசார் மீட்டனர். முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உடல்கள் கிடந்ததாக கூறப்படுகிறது. கொலையானவர்களில் ஒருவர் குறுந்தனி பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்றொருவர் யார்? என்பது குறித்தும், இரட்டைக் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
