Skip to content
Home » தஞ்சை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை…

தஞ்சை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை…

தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் காசவளநாடு புதூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முருகானந்தம். இவரது மனைவி பரமேஸ்வரி (45). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த பரமேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரமேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!