சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்விரோதம் காரணமாக 12-ஆம் வகுப்பு பட்டியலின மாணவர் சஞ்சய் பிரசாத், சக மாணவர்களால் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
