Skip to content
Home » கரூர் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை

கரூர் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை

கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள நொய்யல் குறுக்குச்சாலை பங்களா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சிவபிரகாஷ்( 28). இவரது மனைவி சர்மிளா ( 23). இவர்களுக்கு ஒரு வயதில் அகிலேஷ் என்ற மகனும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் 2-வதாக பிறந்த பெண் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் அந்த குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வது மற்றும் பராமரிப்பதில் அடிக்கடி கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறும், வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சர்மிளா விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது அறையில் தனியாக இருந்த சர்மிளா நள்ளிரவு மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். அதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் இதுகுறித்து சர்மிளாவின் தங்கை ஹரிப்பிரியா (22) என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த ஹரிப்பிரியா மற்றும் உறவினர்கள் சர்மிளாவின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து ஹரிப்பிரியா வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரில் தனது சகோதரியின் சாவில் சந்தேகம் இருப்பதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சர்மிளாவின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சர்மிளாவுக்கும் சிவப்பிரகாஷ்க்கும் திருமணம் ஆகி சில ஆண்டுகளே ஆனதால் சர்மிளா தற்கொலை செய்து கொண்டது குறித்து கரூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!