Skip to content
Home » நாகூர் தர்காவில் நோன்பு திறப்பு…மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் பங்கேற்பு..

நாகூர் தர்காவில் நோன்பு திறப்பு…மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் பங்கேற்பு..

  • by Senthil

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நாகூர் இளைஞர் பொதுநல சங்கத்தின் சார்பாக மதநல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற நோன்பு நிகழ்ச்சியில்

இஸ்லாமியர்களோடு நாகூர் புனித பாத்திமா பேராலய அருட்தந்தை அந்தோணிசாமி, வர்த்தகர்கள், சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். சரியாக 6.25 மணிக்கு சிறப்பு துவா செய்து தொடங்கிய இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் நோன்பு கஞ்சி, புரதசத்துள்ள பேரிச்சை என அறுசுவை உணவுப்பொருட்களை அனைவரும் சாப்பிட்டு நோன்பு திறந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!