Skip to content
Home » நெல்லையில் வாலிபர் படுகொலை….

நெல்லையில் வாலிபர் படுகொலை….

நெல்லை மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்த மேட்டுக்குடி பகுதியை சேர்ந்த வேலா.  கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில்,  தனது இரண்டு மகன்கள் உடன் வசித்து வந்துள்ளார்.  இவரது இரண்டு மகன்களும் பெயிண்டர் வேலை செய்து வரும் நிலையில் வேலாவின் மூத்த மகன் நாகர்கோவிலில் பணிபுரிந்து வந்துள்ளார்.  அவரது இளைய மகன் பார்வதி நாதன் நெல்லையில் கட்டிடப் பணிகளுக்கு பெயிண்டிங் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்த சூழலில்  இவர் நேற்று இரவு பெங்களூர் பகுதிக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்று நிலையில்,  கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நண்பர் ஒருவர் மது அருந்த அழைத்ததாக தெரிகிறது. இதனால் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு தனியாக இவர் நடந்து சென்றுள்ளார்.  அப்போது அங்கே வந்த மர்ம நபர்கள்  பார்வதி நாதனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்,  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த விசாரணையில் பார்வதி நாதனின் நண்பர்களுக்கும் இவருக்கும் இடையே டூவீலரை எடுத்து சென்று விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பார்வதி நாதன் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய  வந்தது. இது  தொடர்பாக பார்வதி நாதனின் நண்பர்கள் சிவந்திப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!