Skip to content
Home » நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை..

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை..

  • by Senthil

திருச்சி, கோவையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் உள்ள வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு

வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த இடும்பாவூர் கார்த்திக்கின் அண்ணாநகர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த நிலையில் சாட்டை முருகனுக்கு 7ம் தேதி ஆஜராகுமாறும், இடும்பாவூர் கார்த்திக் 5ம் தேதி நேரில் ஆஜராகுமாறும் என்ஐஏ தரப்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!