அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப. குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் DC சுரேஷ்குமார் இடம் ஓபிஎஸ் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என புகார் அளித்தார்.
இந்தநிலையில் திருச்சி பொன்மலை, ஜி.கார்னர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக முப்பெரும் மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம் கு.ப. கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.. அப்போது. மாநாடு நிச்சியமாக நடைபெறும். அதிமுகவில் எங்களுக்கு இல்லாத உரிமை எவருக்கும் கிடையாது. யார் என்ன புகார் கொடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நீதி மன்றமோ, இந்திய தேர்தல் ஆணையமோ எந்த தடையும் விதிக்கவில்லை
என்றார். கடந்த 40 ஆண்டுகளாக கையில் பச்சை குத்தி இருக்கிறேன் யார் வந்து அழிப்பது, என் கை அறுத்து யார் எடுப்பார் என ஆவேசம். இதனை தொடர்ந்து பேசிய.. முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், இரட்டை இலை, சின்னம், கொடியை நாங்கள் பயன்படுத்துவோம் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான். நாங்கள் தான் உண்மையான அதிமுக. என்று இவ்வாறு தெரித்தனர்.