Skip to content
Home » ஆளும் பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வீதி உலா நிறைவு..

ஆளும் பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வீதி உலா நிறைவு..

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நம்பெருமாள் தங்க கருடவாகனம், சேஷவாகனம், கற்பக விருட்ச வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 25-ந்தேதி விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. 26-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான இன்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் மாலை 3 மணிக்கு

புறப்பட்டு கருடமண்டபத்திற்கு மாலை 3.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு வாகன மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு சென்றார்.  வாகன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை  ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதி உலா
பங்குனி தேர்த்திருவிழா நிறைவு
ஸ்ரீரங்கம்,மார்ச்,28-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா நம்பெருமாள் ஆளும் பல்லக்கு வீதி உலாவுடன் இன்று நிறைவு பெற்றது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நம்பெருமாள் தங்க கருடவாகனம், சேஷவாகனம், கற்பக விருட்ச வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 25-ந்தேதி விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. 26-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளான இன்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் மாலை 3 மணிக்கு புறப்பட்டு கருடமண்டபத்திற்கு மாலை 3.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு வாகன மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு சென்றார். வாகன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!