Skip to content
Home » திருச்சி ….. பஸ்சில் டூவீலர் மோதல்… வாலிபர் மண்டை உடைந்து சீரியஸ்

திருச்சி ….. பஸ்சில் டூவீலர் மோதல்… வாலிபர் மண்டை உடைந்து சீரியஸ்

  • by Senthil

திருச்சியில் இருந்து கரூர் நோக்கி இன்று காலை 8 மணி அளவில்  ஒரு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.   குடமுருட்டி பாலத்தில் பஸ் சென்றபோது  அந்த வழியாக  டூவீலரில் வேகமாக வந்த ஒரு வாலிபர் பஸ்சில் மோதினார். இதில் அவர்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை  திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்து குறித்து திருச்சி கோட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

நடத்தினர். அதில்,  விபத்தில் சிக்கி காயமடைந்தவர் பெயர் ராமு(27),  மேலசிந்தாமணியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் என்றும், அய்யாளம்மன் படித்துறை அருகே ஒரு துக்க காரியத்துக்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.  ராமுவின் நிலைமை  மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!