Skip to content
Home » திருச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

திருச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த வாளாடி அருகே தண்டாங்கோரை ஹரிஜன் தெருவைச் சேர்ந்தவர் 26 வயதான ஜார்ஜ். இவருடைய மனைவி 24 வயதான கீர்த்திகா. இவர்களுக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கணவர் குடிபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி கீர்த்திகா மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். கடந்த 28 ம் தேதி வீட்டில் இருந்த கீர்த்திகா தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை கண்ட அவரது கணவர் காப்பாற்ற முயன்றார்.

இந்த விபத்தில் கீர்த்திகா படுகாயம் அடைந்தார். காப்பாற்ற சென்ற கணவரும் காயம் அடைந்தார். படுகாயமடைந்த கீர்திகாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 5 வருடங்களே ஆனதால் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!