திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் பகுதியில் இன்று அதிகாலையில் அரசு பஸ்சும், தனியார் ஆம்னி பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. பெங்களூருவில் இருந்து வந்த அரசு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றை உடைத்து சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் மீது பயங்கரமாக மோதியதாக தெரிகிறது.

இந்தவிபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் ஆண்கள், ஒருவர் பெண். மேலும், 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை நடத்தினர்.