ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இன்றைய சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இது தமிழகத்தின் அரசியல் உரிமைகளைப் பறிக்கும் செயல்

என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் ஒரு

பகுதியாக, கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணபுரத்தில், கரூர் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி திமுக கட்சி நிர்வாகிகளுடன் கருப்புக்கொடி ஏற்றி மசோதாவிற்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்
