Skip to content
Home » வாலிபர் கழுத்தறுத்து கொலை…. திருச்சியில் சம்பவம்…. பரபரப்பு..

வாலிபர் கழுத்தறுத்து கொலை…. திருச்சியில் சம்பவம்…. பரபரப்பு..

  • by Senthil

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடியாலம் கிராமத்தில் பொன்னன் என்பவரது மகன் கோகுல் இவர் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கோகுல் கொடியாலத்தில் உள்ள அவரது வீட்டு வாசலில் கழுத்துப் பகுதியில் வெட்டுப்பட்டு அதிகாலையில் இறந்து கிடந்துள்ளார்.

சம்பவத்தை அருகில் உள்ளவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த ஜீயபுரம் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விஜயபுரம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!