Skip to content
Home » எதிர்க்கட்சிகளை மிரட்ட கெஜ்ரிவால் கைது….. திருச்சியில் வைகோ பேட்டி

எதிர்க்கட்சிகளை மிரட்ட கெஜ்ரிவால் கைது….. திருச்சியில் வைகோ பேட்டி

திருச்சியில் இன்று மாலை நடைபெற உள்ள  தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் மதிமுக பொதுச்செயலாளர்  வைகோவும் கலந்து கொள்கிறார். இதற்காக திருச்சி வந்த வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது:

ஏகாதிபத்தியத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கின்ற தர்மயுத்தம் தான்  இந்த தேர்தல்.   ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என இன்று கோஷத்தை வைக்கின்ற இந்துத்துவா சக்திகள் சனாதான சக்திகள் கை ஓங்கி விடக்கூடாது என்பதிலே இந்தியா கூட்டணி வலுவாக  இருக்கிறது.

ர் திராவிட மாடல் ஆட்சியை அனைத்து மாநிலத்திற்கும் முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக நடத்தி வருகின்ற மு.க.ஸ்டாலின்  திருச்சியில் இன்று பிரசாரத்தை துவங்குகிறார். புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும்  இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

பாஜக அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தான் டெல்லி முதலமைச்சரை கைது செய்து கொண்டு போனார்கள்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்கள் இந்துத்துவா  அஜண்டாவை  ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர்.

சிஏஏ சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமியருக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கூட மறுத்து வருகிறார்கள்.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றார்கள். ஆகவே ஜனநாயகத்திற்கு மதச்சார்பற்ற தன்மைக்கும் சமதர்ம கொள்கைக்கும் நேர்விரோதமாக ஒரு கூட்டம்  இந்தியாவில் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் அவர்கள் காலெடுத்து வைக்க முடியாது.
இது பெரியார் பூமி, அறிஞர் கலைஞருடைய பூமி. இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு உண்மையாக விடுக்கப்பட்ட சவால்.எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!