Skip to content
Home » தமிழகம் » Page 408

தமிழகம்

இன்றைய ராசிபலன்… (16.11.2023)

வியாழக்கிழமை.. மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது. ரிஷபம் இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பேச்சில் நிதானம் நல்லது. மிதுனம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் பணிச்சுமை குறையும். கடகம் இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். சிம்மம் இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவினாலும் செலவுகளும் அதிகரிக்கும். திருமண சுப முயற்சிகளில் சிறு இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கன்னி இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். துலாம் இன்று பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் ரீதியான புதிய திட்டங்களில் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பகை விலகி நட்பு ஏற்படும். விருச்சிகம் இன்று உங்களுக்கு நெருங்கியவர்களால் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மன அமைதி உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தனுசு இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். மன அமைதி ஏற்படும் மகரம் இன்று உங்களுக்கு வர வேண்டிய பணவரவில் சில தடங்கல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்களால் அனுகூலப் பலன் கிட்டும். கும்பம் இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சேமிப்பு உயரும். மீனம் இன்று உங்களது பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும்.

மறைந்த சங்கரய்யாவுக்கு புதுகையில் செவ்வணக்க அஞ்சலி..

  • by Senthil

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் மறைந்த தோழர் சங்கரைய்யா அவர்களுக்கு செவ்வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ.கவிதைப்பித்தன்,புதுக்கோட்டை நகர தி.மு.க.செயலாளர் ஆ.செந்தில் உள்ளிட்டகம்யூனிஸ்டு இயக்கதோழர்கள்,அனைத்துக்கட்சியினர்பங்கேற்றனர்.

திருச்சி அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது…

திருச்சி,திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் அரசு அனுமதியில்லாமல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் நேற்று… Read More »திருச்சி அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது…

மயிலாடுதுறை துலா உற்சவம்… தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு…..

மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். அதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாடல்பெற்ற சிவாலயங்களில் துலா… Read More »மயிலாடுதுறை துலா உற்சவம்… தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு…..

தஞ்சையில் ஆதரவின்றி கிடந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழப்பு….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தனியார் கம்பெனி அருகே பாலத்தின் அடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் அனாதரவாக கிடந்துள்ளார். அப்போது அந்த… Read More »தஞ்சையில் ஆதரவின்றி கிடந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழப்பு….

தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… மர்ம நபருக்கு வலைவீச்சு….

தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்த பெண் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி… Read More »தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… மர்ம நபருக்கு வலைவீச்சு….

பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு..

  • by Senthil

தஞ்சாவூர் ஒன்றியம் கூடலூர் நந்தவனத் தோட்டம் வெண்ணாற்றின் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாபநாசம் வட்டம் மண்ணியாறு தலைப்பில் காவிரி வடிநில கோட்டம் சார்பில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதையும்,… Read More »பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு..

விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு டிச. 2க்கு ஒத்திவைப்பு

  • by Senthil

முன்னாள் அமைச்சர்  சி. விஜயபாஸ்கர்,  பதவியில் இருந்தபோது வருமானத்திற்க அதிகமாக ரூ.35.79 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயபாஸ்கர், அவரது மனவைி ரம்யா ஆகியோர்  மீது  வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு … Read More »விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு டிச. 2க்கு ஒத்திவைப்பு

பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கடும் அவதி

  • by Senthil

மழைக்காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு நோய்கள் பரவி வரும் கால சூழலில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு குழந்தைகள் ,  வயது முதிர்ந்தவர்கள் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் சிகிச்சைக்காக தினந்தோறும் வருகின்றனர். அரசு… Read More »பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கடும் அவதி

கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம்’… – உதயநிதி ஸ்டாலின்!

  • by Senthil

கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம். பாசிஸ்ட்டுகளை விரட்டி மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம்” என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம்… Read More »கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம்’… – உதயநிதி ஸ்டாலின்!

error: Content is protected !!