Skip to content

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் வரை.. மின்நிறுத்தம் கூடாது… அமைச்சர் தங்கம் தென்னரசு..

10,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி சீர் செய்யவேண்டும். தேர்வு காலம் முடியும் வரை துணைமின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டாம். கோடைகால மின் தேவை எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்யப்படும் என்று கூறிய அமைச்ச தங்கம் தென்னரசு தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!