Skip to content

10ம் வகுப்பில் 4,917 பள்ளிகள் 100% தேர்ச்சி

தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.  சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இந்த முடிவுகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: தேர்வெழுதிய  மாணவர்கள் 4, 36, 120, தேர்வெழுதிய  மாணவிகள் 4,35,119 மாணவ, மாணவிகளின் மொத்த எண்ணிக்கை 8,71,239பேர் தேர்ச்சி பெற்றவர்கள் 8,71,261பேர். இவர்களில் மாணவிகள் 4,17,183 பேரும், (95.88%) 4,00,076 மாணவர்களும் தேர்ச்சி(91.74%)  பெற்றுள்ளனர்., மாணவர்களை விட  மாணவிகள் 4.14% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 15,652 பேர் தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆகி உள்ளனர்.  கடந்த ஆண்டை விட  இந்த ஆண்டு கூடுதலாக 2.25 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். 12,485 பள்ளிகளை  சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதினர். இதில் உயர்நிலைப்பள்ளிகள் 4930, மேல்நிலைப்பள்ளிகள் 7555, 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை1867,  மொத்தமாக  100 % தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை  4917. 10ம் வகுப்பு ரிசல்ட், அந்தந்த பள்ளிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை  பிற்பகல் 2 மணிக்கு ஆன் லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
error: Content is protected !!