Skip to content

கரூர் அருகே 15 கிலோ புகையிலை பொருட்கள்-2 கார் பறிமுதல்.. 2 பேர் கைது

  • by Authour

கர்நாடகா மாநிலம் பெங்களூருரிலிருந்து சட்டவிரோதமாக காரில் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சையது அலி தலைமையில் போலீசார் குளித்தலை, சுங்ககேட் அருகே வாகனத்தணிக்கை செய்து கொண்டிருந்து போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த Maruti EECO கார் மற்றும் Suzuki S-Cross கார்களை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.47,000/-

மதிப்புள்ள 15 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் 04 மூட்டைகளையும், 05 கிலோ எடை கொண்ட விமல் பாக்கு 01 மூட்டையும் கைப்பற்றி காரில் வந்த 1.மணிகண்டன், 24 நாமக்கல் மாவட்டம், 2.கார்த்திகேயன், 42 நாமக்கல் மாவட்டம் ஆகியோர்களை பிடித்து விசாரணை செய்ததில் மேற்படி நபர்கள் கர்நாடகா மாநிலம், பெங்களூருரிலிருந்து சட்ட விரோதமாக விற்பனை செய்ய கடத்தி வந்ததாக தெரிவித்தனர். அதன் பின்பு அவர்களிடமிருந்து 2 கார்கள், பணம் ரூ.1,030/- மற்றும் 2 மொபைல் போன்களை கைப்பற்றி குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு மேற்படி நபர்கள் மீது குளித்தலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குளித்தலை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!