தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடந்தது. மொத்தம் 9 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 16ம் தேதியே வெளியாகும் என இன்று தெரிவிக்கப்பட்டது.
இதுபோல பிளஸ்1 தேர்வு வரும் 16ம் தேதி பிற்பகல் வெளியாக உள்ளது. பிளஸ்2 தேர்வு முடிவும் 1 நாள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு 3 நாள் முன்னதாக வெளியிடப்படுகிறது.