Skip to content

பல்வேறு இடங்களில் கைவரிசை..பலே கொள்ளையன் கைது… திருச்சி க்ரைம்

இரும்பு கம்பிகள் திருடிய 2 சிறுவர்கள்   திருச்சி புத்தூர் பிஷப்குள தெரு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 28). இவர் காஜாமலை மெயின் ரோடு பகுதியில் புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இரண்டு சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு இரும்பு கம்பிகளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சூர்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய பலே கொள்ளையன் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபருக்கு பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் தெருக்களில் நடமாடும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாநகரில் நான்கைந்து இடங்களில் அந்த நபர் கைவரிசை காட்டி உள்ளார். அதைத்தொடர்ந்து கண்டோன்மெண்ட் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு, மனைவி குழந்தையுடன் கருமண்டபம் பகுதியில் தங்கி இருந்து பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார். கைதானவர் மதுரையைச் சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்துள்ளது. இன்று மாலைக்குள் முழு விபரங்களையும் போலீசார் தெரிவித்து,அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர். மகனை கத்தியால் தாக்கிய தந்தை கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி விறகுபேட்டை தெருவை சேர்ந்தவர் சாம் மோசஸ் (19) இவரது தந்தை சாமுவேல் (50 ).இந்நிலையில் நேற்று இரவு மகன் வீட்டுக்கு மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தந்தை மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தந்தை கத்தியால் மகனை தாக்கி உள்ளார். இதில் வலது பக்கம் வயிற்றில் காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து தந்தை சாம் வேலை கைது செய்தனர்.   போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது திருச்சி திருவரங்கம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செக் போஸ்ட் அருகே போதை மாத்திரைகள் விற்றதாக கடலூர் பண்ருட்டி பொன்னன் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமரன் ( 24 ) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பஸ் ஸ்டாண்ட் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு  திருச்சி அரியமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து வந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது எஸ்ஐ டி பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சிஅரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இறந்தவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை திருச்சி உறையூர் கீழ வைக்கோல் கார தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது 18 வயது மகள் அருகிலுள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அடிக்கடி போன் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தந்தை மகளை கண்டித்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த மகள் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
error: Content is protected !!