Skip to content

கரூர் அருகே மணல் கடத்தி பதுக்கிய 2 பேர் கைது-2 லாரிகள் – கார் பறிமுதல்

கரூர் அருகே ஏமூர் புதூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்வதாக காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் ஏமூர் புதூரில் உள்ள பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான இடத்தை சோதனை செய்த போது அங்கு சுமார் 35 யூனிட் ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட கோயம்புத்தூர் லாரி உரிமையாளர் சதாசிவம், 38 மற்றும் கரூர், மூக்கனாங்குறிச்சிலாரி ஓட்டுநர் 2.சூர்யா, 34 ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் சதாசிவம் என்பவர் மேற்படி பழனிச்சாமயின் இடத்தை வாடகைக்கு பிடித்து சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்வதற்காக பதுக்கி

வைத்துள்ளதாக தெரிவித்தன் பேரில் பசுபதிபாளையம் வட்ட காவல் ஆய்வாளர், சதாசிவம் மற்றும் சூர்யா இருவரையும் கைது செய்து சுமார் 35 யூனிட் ஆற்று மணலையும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகள் மற்றும் Toyota Etios – என்ற காரையும் கைப்பற்றி வெள்ளியனை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். மேலும் சதாசிவம் என்பவர் மீது ஏற்கனவே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் சின்னதாரபுரம் காவல் நிலையங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

error: Content is protected !!