மதுரை வாடிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் ஸ்ரீ கிருஷ்ணன், நாராயணன் ஆகியோர் உயிரிழந்தார். மாட்டுக்காக புல் அறுக்க சென்றபோது கல்லூரி மாணவர் ஸ்ரீகிருஷ்ணனை மின்சாரம் தாக்கியது. காப்பாற்ற முயன்ற நாராயணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் , பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

