சிவகங்கையில் மினிபஸ் படியில் பயணம் செய்த +2 மாணவர் உயிரிழந்துள்ளார். மினிபஸ் விபத்தில் படியில் பயணித்த சூர்யா என்ற இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார். மினிபஸ் பள்ளி வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

