Skip to content

கோ-ஆப்டெக்ஸில் ரூ.20 கோடி லாபம்….. அமைச்சர் காந்தி தகவல்….

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 54 வது புதிய கோ ஆப் டெக்ஸ் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தற்போது 150 தறிகள் இயங்கி வருகிறது அதில் 106 தறிகள் தமிழகத்திலும் 44 தறிகள் பிற மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. தான் கைத்தறி துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது இத்துறையில் சுமார் 9.5 கோடி நட்டத்தில் இயங்கி வந்தது.
பிறகு ஓராண்டு காலத்திலேயே சுமார் 20 கோடி லாபம் அடைய செய்தோம். மேலும் விற்பனையை அதிகரிக்க செய்வதற்காக தனிப்பட்ட

ஆலோசகரை பூனாவில் இருந்து நியமித்து அவர்களின் அறிவுரைப்படி விற்பனையில் செய்ய வேண்டிய மேம்பாட்டு முறைகளை கடைப்பிடித்து தற்போது விற்பனை இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளது. தற்போது 54 ஆவது கடை இங்கு திறக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறையில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த சம்பளம் உயர்வு 15 நாட்களுக்கு முன்பு முடிவு பெறப்பட்டது. முதலமைச்சர் பொறுப்பற்ற பிறகு கைத்தறிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்காலிகமாக பணியாற்றி வந்த இவர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்றப்பட்டு அவர்களுக்கு வழங்கும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது . வழக்கமாக 20% தள்ளுபடி வழங்கப்பட்டு வந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் முதலமைச்சரின் அறிவுரைப்படி புதிய ரகங்கள் வகைகளை மேம்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

error: Content is protected !!