2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?
பாதயாத்திரை, ரத யாத்திரை என எத்தனையோ யாத்திரைகளை இந்திய திருநாடும், தமிழ்நாடும் பார்த்திருக்கிறது. யாத்திரைகள் ஜனநாயகத்தின் ஒரு உன்னத போராயுதம். …. ஆம் தேசத்தந்தை மகாத்மா காந்தி 1930ல் நடத்திய தண்டி யாத்திரையை உலகமே உற்று நோக்கியது.
அமைதிப் யாத்திரை, கலகம் இல்லா யாத்திரை, ஆனால் சுதந்திர போராட்டத்தின் மிகப்பெரிய யாத்திரையாக அது அமைந்தது. இந்த யாத்திரையால் சுதந்திர போராட்ட நெருப்பு மேலும் பற்றி எரிந்தது.
அதே வருடத்தில் தமிழ்நாட்டிலும் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை உப்பு சத்தியாகிரக யாத்திரை நடந்தது.
இந்த இரு யாத்திரைகளும் இந்தியாவின் சுதந்திரத்திற்காக நடத்தப்பட்ட யாத்திரை.
இதுபோல அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் ஒவ்வொரு காலகட்டத்தில் யாத்திரைகளை நடத்தி உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை 2022ல் நடத்தினார்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி 1982ல் நீதிகேட்டு யாத்திரை நடத்தினார்.
இலக்கியச்செல்வர் குமரி அனந்தன் மதுவிலக்கு வேண்டி பலமுறை யாத்திரை நடத்தி உள்ளார். ஜெயலலிதா ஆட்சியை கண்டித்து வைகோ மாபெரும் பாத யாத்திரை நடத்தி உள்ளார்.
அடுத்ததாக 2023ல் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை ‘ என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் தேர்தலுக்காக ஒரு யாத்திரை நடத்தினார். 2024 மக்களவை தேர்தலுக்குள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று வரும் வகையில், பாத யாத்திரை, கார் யாத்திரை என இணைத்து நடத்தினார்.
அந்த யாத்திரையின் ரிசல்ட் என்ன என்பதும், யாத்திரை நடத்திய அண்ணாமலையின் தற்போதைய நிலை என்ன என்பதும் அரசியல் பார்வையாளர்களுக்கு புரியும்.
இப்போது மீண்டும் ஒரு தலைவர் தமிழ்நாட்டில் பாத யாத்திரை புறப்பட தயாராகிக்கொண்டு இருக்கிறார். அதுவும் சரியாக 2 வருடத்திற்கு பிறகு அதே ஜூலை மாதத்தில் இந்த யாத்திரையை தொடங்க இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான் அடுத்ததாக யாத்திரை நடத்த இருக்கும் தலைவர்.
அடுத்த மாதம் அவர் பாதயாத்திரை தொடங்க திட்டமிட்டிருப்பதாக அதிமுக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
யாத்திரைக்கான காரணம் என்ன என்று விசாரித்தால், இதுவும் ஒரு தேர்தல் வியூகம் தானாம்.
அந்த யாத்திரைக்கு ‘ மக்கள் யாத்திரை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாம்.
2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து அந்த யாத்திரைக்கு எடப்பாடி தன்னை தயார்படுத்தி வருகிறார். இதற்காக தனது கிராமத்திலும், வீட்டிலும் நடைபயிற்சியும் மேற்கொண்டு வருகிறாராம்.
தன்னை ஒரு விவசாயி, மண்வெட்டி பிடித்து வெட்டுவேன் என கூறிவந்த எடப்பாடி இதுவரை யாத்திரை எதுவும் நடத்தியதில்லை. முதன் முதலாக யாத்திரை செய்ய இருப்பதால், அதற்காக தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பாதயாத்திரை குறித்தும் ஆலோசித்தாராம். மாவட்ட செயலாளர்களும் அதை ஒருமனதாக வரவேற்றார்களாம். எனவே யாத்திரைக்கான ஆயத்த பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் யாத்திரை இருக்கும் என்றாலும், நகரப்புறங்களில் மட்டுமே பாதயாத்திரை, மற்ற இடங்களில் கார் யாத்திரை என்ற அளவில் இதனை வடிவமைத்து வருகிறார்கள்.
தொகுதிக்கு ஒன்றிரண்டு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தி அதிமுகவின் சாதனைகளை சொல்லவும், திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்த யாத்திரை தொடங்குவதற்குள் தவெக தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரையும் அதிமுக, பாஜக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதும் எடப்பாடியின் திட்டம். இதற்காக டெல்லியில் இருந்தும் வேலைகள் நடக்கிறதாம்.
குறிப்பாக நடிகர் விஜய் கூட்டணிக்குள் வரவேண்டும் என்பது பாஜக, அதிமுகவின் திட்டமாம். இதற்கு விஜய் மறுத்து விட்டால் யாத்திரையில், ஏதாவது ஒரு இடத்தில் பங்கேற்று யாத்திரையை வாழ்த்த வேண்டும் என்ற அடிப்படையிலும் விஜயுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
யாத்திரை தொடங்குவதற்குள் விஜயை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுகிறோம் என, அதற்கான வேலைகளை ஜரூராக சிலர் செய்து வருகிறார்களாம்.
இதற்கிடையே இன்று சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை எடப்பாடி கூட்டி உள்ளார். மாநிலங்களவை தேர்தல் பற்றி ஆலோசிக்க கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்றாலும், இந்த கூட்டத்திலும் பாதயாத்திரை குறித்தும் விவாதிக்கப்படுகிறதாம்.
ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் எடப்பாடி வரும்போது என்ன ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்களிடம் விரிவான அறிக்கை அளிக்கப்பட இருக்கிறது.
சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அத்தனை தேர்தல்களும், அரசியல் கட்சிகளுக்கு முக்கியமானது தான். எடப்பாடி தலைமையில் அதிமுக சந்தித்த அத்தனை தேர்தல்களும் தோல்வி அடைந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் எடப்பாடிக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் முக்கியமானது.
வழக்கம் போல இந்த தேர்தலிலும் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டால் அது எடப்பாடியின் அரசியல் வாழ்வை மட்டுமல்ல, அதிமுகவுக்கும் பெரும் பாதகத்தை ஏற்படுத்தி விடும் என அதிமுக மேல்மட்ட தலைவர்கள் கருதுவதால், கூட்டணியை மேலும் விரிவுபடுத்தி, பாதயாத்திரை செல்ல வேண்டும் என பல திட்டங்களை தயாரித்துள்ளார்களாம்.
இந்த திட்டங்கள் 2026ல் எடப்பாடிக்கு கைகொடுக்குமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
தமிழகம் முழுவதும் வரும் 23-ம்தேதி பாஜக சார்பில் 5 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை ஓரிரு நாட்களில் அறிவிப்பார்.
தமிழகம் முழுவதும் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண்,என் மக்கள்’ யாத்திரையை வரும்28-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராமேசுவரத்தில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு நாளும் கிராமப் பகுதிகளில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், நகர்ப்புறங்களில் 4 தொகுதிகளையும் கடக்கும் வகையில் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த யாத்திரைக்கு மாநிலப் பொறுப்பாளராக, தமிழக பாஜகதுணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன், துணைப் பொறுப்பாளராக விளையாட்டுப் பிரிவுத் தலைவர்அமர்பிரசாத் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 200 நாட்களுக்கு யாத்திரையைநடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அண்ணாமலையுடன் பயணிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில், பாஜக அகிலஇந்தியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, மாநில துணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, துணைத் தலைவர் கரு.நாகராஜன், பாஜகமூத்த தலைவர் ஹெச்.ராஜா,தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், எம்எல்ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜகவில் கண்ணதாசன் மகன்: முன்னதாக கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை