Skip to content

27-வது முறையாக ரத்த தானம் செய்த பெரம்பலூர் ஆயுதப்படை காவலர்…

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கிரித்திகா (62) என்ற மூதாட்டி இரத்தப்பற்றாக்குறை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு AB+ இரத்த வகை தேவை என்று அவரது உறவினர்களின் மூலம் தகவலறிந்த ஆயுதப்படை காவலர் 1066 முகமதுகனி இன்று 12.07.2023 -ம் தேதி மேற்படி மூதாட்டிக்கு 450 மில்லி லிட்டர் இரத்தத்தை கொடையாக அளித்தார். மேற்படி காவலர் 27 -வது முறையாக குருதிதானம் அளித்துள்ளார்.

இச்செயலை பாராட்டி சக காவலரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!