Skip to content

எக்ஸ்பிரஸில் 29 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் பறிமுதல்..

  • by Authour

ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்துவதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று அதிகாலை ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் வந்தடைந்த ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டபோது பொது ஜன பெட்டியின் கழிவறையின் அருகே ஒரு வெள்ளை சாக்கு பையை ‌ சோதனை மேற்கொண்டபோது 16 பண்டல்கள் கொண்ட சுமார் 29கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் ‌இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!