Skip to content

சட்டமன்ற பேரவை 2ம் நாள் கூட்டம் தொடங்கியது

  • by Authour

தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற   மற்றும் மக்களவை உறுப்பினர்மோகன் ஆகியோர்  மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல் சி.ஏ.ஜி. அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இன்றைய சட்டசபை நிகழ்வின்போது 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!