Skip to content

திருப்பத்தூர் அருகே கஞ்சா கடத்திய தந்தை மகன் உட்பட 3 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயாகுப்தாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வெள்ளக்குட்டை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுப்பட்ட போது, அங்கு பண்டல்களில் 8 கிலோ 500 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது, உடனடியாக இது சம்பந்தமாக வெலதிகாமணி பெண்டா பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா மற்றும் அவரது தந்தை மணி மற்றும் வினோத் ஆகிய 3 பேரை தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்க்கொண்ட போது, ஜெய சூர்யா மற்றும் வினோத் லாரி ஓட்டுநர்களாக உள்ள நிலையில் இவர்கள் ஒரிசா மாநிலத்திலிருந்து லாரி மூலம் கஞ்சா கடத்தி வந்து, அதனை வெலதிகாமணி பெண்டா மற்றும் வாணியம்பாடி, ஆலங்காயம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது, உடனடியாக 3 பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 8 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, ஆலங்காயம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து 3 பேர் மீது ஆலங்காயம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவர்களிடம் மேலும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..
error: Content is protected !!