Skip to content

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 

மராட்டிய மாநிலம் நவி மும்பை வஷி நகர் செக்டார் 14 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 10வது மாடியில் பற்றிய தீ மளமளவென 11 மற்றும் 12வது மாடிகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் குடியிருப்பில் உறங்கிக்கொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் 8 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணிநேர போராட்டத்திற்கும்பின் தீ முழுவதும் அனைக்கப்பட்டது. ஆனாலும், இந்த தீ விபத்தில் குடியிருப்பில் வசித்து வந்த 2 பெண்கள், 6 வயது குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, படுகாயமடைந்த 10 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

error: Content is protected !!