Skip to content

திருச்சி அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது

திருச்சியருகே ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகேயுள்ள கிளிக்கூடு கிராமத்தைச் சேர்ந்தவர் பி. அசோக்குமார் (39). ரௌடியான இவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த சிலர் வியாழக்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நெ. 1 டோல்கேட், கொள்ளிடம் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம். பாலகிருஷ்ணன் (56), அவரது மனைவி கலாராணி (52), இவர்களது மகன்கள் பிரபு (எ) வேலாயுதம் (36) மற்றும் பிரவீன் (32), ஏ. சித்திரைசெல்வன் (28), ஆகிய 5 பேரை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய எம். மோகன் மற்றும் அவரது சகோதரர் சின்னப்பு என்கிற பிரகாஷ் இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
error: Content is protected !!