Skip to content

7 வயது மகன் வைரஸ் காய்ச்சலுக்கு பலி… தாய்-தந்தை தற்கொலை…

சிவகாசி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி அவரது மனைவி வக்தசலா இவர்கள் இருவருக்கும் கோவை வேடம்பட்டி பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 – ம் தேதி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அம்பிகா லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று அறையை காலி செய்ய ஹோட்டல் ஊழியர் கதவை தட்டி பார்த்தும் கதவு திறக்கவில்லை. மாற்று சாவியை கொண்டு அறையை திறந்து பார்த்த போது வாயில் நுரை தள்ளியவாறு இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து காட்டூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உயிரிழந்த பழனிச்சாமியின் அண்ணன் முருகேசனிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில் அவர்களுக்கு 7 வயதில் மகன் இருந்ததாகவும், வைரஸ் காய்ச்சல் வந்து இறந்து போனதால் இருவரும் மனமுடைந்து இருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த கோவை காட்டூர் காவல் துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!